கண்ணாடியில் கலைப் பொருட்கள் - சிறுவனின் அபார திறமை

கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் அமீது யாசின். இவரின் 3 வயது மகன் அமீது அசில். இந்த வயதில் அசாத்திய திறமையுடன் காணப்படுகிறான் அசில்.
கண்ணால் பார்ப்பவற்றையும், மனதில் தோன்றுவதையும் அழகிய பொருட்களாக வடிவமைக்கும் ஆற்றல் இந்த சிறுவனிடம் உள்ளது.
இதற்கு அசிலுக்குத் தேவைப்படுவது உடைந்து போன கண்ணாடிகள், பிளாஸ்டிக் துண்டுகள், மரக்கட்டைகள் மட்டுமே.
இவற்றைக் கையில் கொடுத்து விட்டால் போதும் விதம் விதமான கலைப் பொருட்களை உருவாக்கி அசத்துகிறான் அசில்.
இதுதவிர சிறுவன் அமீது அசில் ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரனாக திகழ்கிறான். சிறுவனின் கைகளில் கலைகள் பல உருவாகின்றதை பார்க்கும் அக்கம் பக்கத்தினர் அதிசயிக்கின்றனர். இந்த செயல்களை சிறுவன் யாரிடமும் கற்றுக்கொண்டு செய்யவில்லை.
இயற்கையிலேயே இத்தகைய திறமை சிறுவனிடம் உள்ளது. மேலும் கணினி உயர்கல்வி கற்றவர்கள் கூட கையாள திணறும் புதிய சாப்ட்வேர்களை சிறுவன் அமீது அசில் கண்ணிமைக்கும் நேரத்தில் கையாள்வது மேலும் ஒரு வியத்தகு திறமையாக உள்ளது.












Click it and Unblock the Notifications