கண்ணாடியில் கலைப் பொருட்கள் - சிறுவனின் அபார திறமை

Subscribe to Oneindia Tamil

Hameed Asil
கீழக்கரை: உடைந்து போன கண்ணாடிகளைக் கொடுத்தால், அழகான கலைப் பொருட்களை உருவாக்கி அனைவரையும் அதிசயிக்க வைக்கிறான் கீழக்கரையைச் சேர்ந்த 3 வயது சிறுவன்.

கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் அமீது யாசின். இவரின் 3 வயது மகன் அமீது அசில். இந்த வயதில் அசாத்திய திறமையுடன் காணப்படுகிறான் அசில்.

கண்ணால் பார்ப்பவற்றையும், மனதில் தோன்றுவதையும் அழகிய பொருட்களாக வடிவமைக்கும் ஆற்றல் இந்த சிறுவனிடம் உள்ளது.

இதற்கு அசிலுக்குத் தேவைப்படுவது உடைந்து போன கண்ணாடிகள், பிளாஸ்டிக் துண்டுகள், மரக்கட்டைகள் மட்டுமே.

இவற்றைக் கையில் கொடுத்து விட்டால் போதும் விதம் விதமான கலைப் பொருட்களை உருவாக்கி அசத்துகிறான் அசில்.

இதுதவிர சிறுவன் அமீது அசில் ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரனாக திகழ்கிறான். சிறுவனின் கைகளில் கலைகள் பல உருவாகின்றதை பார்க்கும் அக்கம் பக்கத்தினர் அதிசயிக்கின்றனர். இந்த செயல்களை சிறுவன் யாரிடமும் கற்றுக்கொண்டு செய்யவில்லை.

இயற்கையிலேயே இத்தகைய திறமை சிறுவனிடம் உள்ளது. மேலும் கணினி உயர்கல்வி கற்றவர்கள் கூட கையாள திணறும் புதிய சாப்ட்வேர்களை சிறுவன் அமீது அசில் கண்ணிமைக்கும் நேரத்தில் கையாள்வது மேலும் ஒரு வியத்தகு திறமையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+