வேறுபட்ட மக்களை ஒன்றுபடுத்துவது கலையே: பர்னாலா
தஞ்சை: நாட்டில் உள்ள வேறுபட்ட மக்களை ஒன்றுபடுத்துவது கலையே என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சலங்கை நாதம் தேசிய நாட்டுப்புற கலை விழா மற்றும் கைவினைப் பொருட்காட்சியை அரண்மணை வளாகத்தில் பர்னாலா துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உலகின் சிறந்த கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் தான். நடனம், நாடகம், கைவினைகளில் பல சிறப்புக்களை கொண்டது.
மொழியால், இனத்தால் நாம் வேறுபட்டியிருந்தாலும் கலைகள் நம்மை ஒன்றுபட செய்திகின்றன. எனவே அதன் தன்மை மாறாமல் அதை இளம் தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும்.
பண்பாட்டு மையங்கள் மூலம் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கு கலைகளை எத்துச் செல்வதில் பண்பாட்டு மையங்கள் சிறப்பாக முறையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் இளைஞர்கள் நமது கலைகளை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.