தமிழக ஆளுனர் பர்னாலாவுக்கு அன்னை தெரசா விருது
சென்னை: வாழ்நாள் சாதனையாளருக்கான அன்னை தெரசா விருது இந்தாண்டு தமிழ்நாடு ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜ்பவன் செய்தி குறிப்பு ஒன்று கூறுகையில்,
அன்னை தெரசா சர்வதேச மற்றும் மில்லினியம் விருது கமிட்டி கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அன்னை தெரசா வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது.
இந்தாண்டு தமிழ்நாடு ஆளுனர் எஸ்எஸ் பர்னாலாவுக்கு, அவரது சமுதாயப் பணி மற்றும் நிர்வாக திறமை ஆகியவற்றை பாராட்டும் வகையில் வழங்கப்பட இருக்கிறது.
கொல்கத்தாவில் நடக்கும் இதற்கான விழாவில் மக்களை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு இந்த விருதை வழங்குகிறார்.
பர்னாலா மாணவ பருவத்திலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பஞ்சாப் முதல்வராக இருந்த போது, அம்மாநிலத்தலி கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். அமிர்தசரசில் குருநானாக் பல்கலைக்கழகம் அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
பஞ்சாபில் தலைவிரித்தாடிய தீவிரவாதத்தை அழிப்பதில் பெரும் பங்காற்றினார். ஐநா, சார்க் மற்றும் பல சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துள்ளார். தற்போது தமிழக ஆளுனராக இருக்கும் இவர் இங்கு கல்வியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தி வருகிறார் என்கிறது அந்த குறிப்பு.












Click it and Unblock the Notifications