வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கோரிக்கை
துபாய்: வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என அமீரக இந்தியா சகோதரத்துவ பேரவை நடத்திய கருத்தரங்கில் கோரிக்கை விடப்பட்டது.
அமீரக இந்தியா சகோதரத்துவ பேரவை நடத்திய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு துபாயில் உள்ள கராமா மைய அரங்கில் கடந்த 9ம் தேதி நடந்தது.
இந்த கருத்தரங்கில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பன்னெடுங்காலமாக ஓட்டுரிமை மறுக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மொய்து தலைமை தாங்கினார். வக்கீல் உமர் பாரூக், செய்யது அலி, டாக்டர் கே.வி.அப்துல் லதீப் ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஈராக், ஈரான், சிரியா, பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகள் கூட வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கியுள்ளது. அவர்கள் இங்குள்ள தங்கள் நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று ஓட்டு போடுகின்றனர். ஆனால் உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த உரிமை வழங்கப்படவில்லை.
இந்த ஒட்டுரிமையை பெறுவதற்கான பிரசாரத்தின் துவக்கம் தான் இந்த கருத்தரங்கு என்றும், வெற்றி காணும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றனர்.












Click it and Unblock the Notifications