சென்னையில் ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் ஈத்மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை ஹோட்டல் இம்பீரியல் ஃபைஸ் மஹாலில் நடைபெறுகிறது.
கடந்த 18 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி நாளை காலை பத்து மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். நிகழ்விற்கு சென்னை-1 மியாஸி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி தாளாளர் பி.எஸ்.எம். அப்துல் காதர் தலைமை வகிக்கிறார்.
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி குலாம் முஹம்மது முன்னிலை வகிக்கிறார்.
டிரஸ்ட் செயலாளர் மவ்லவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரி இஸ்லாம் ஓர் அறிமுகம் குறித்து உரை நிகழ்த்துகிறார். சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.
மாலை 6.50 க்கு நடைபெறும் நிகழ்விற்கு டி.எம். உமர் ஃபாரூக் தலைமை வகிக்கிறார். விடியல் வெள்ளி மாத இதழ் நிறுவனரும், வைகறை வெளிச்சம் இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர் மு. குலாம் முஹம்மது இஸ்லாம் சந்திக்கும் சோதனைகள், சவால்கள், சாதனைகள் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி முஸ்லிம்களின் பலமும் பலஹீனமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட், 235 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014.
தொலைபேசி: 044 - 45566909
மின்னஞ்சல் : [email protected]