ஈழத் தமிழர்களின் விடிவெள்ளி ஜெ.-டென்மார்க் தமிழ் அமைப்பு
வென்ட்போர்க்: தனி ஈழம் அமைப்பேன் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழர்களின் விடிவெள்ளியாக திகழ்வதாக டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பொன். மகேஸ்வரன், ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்,
உலக வரைபடத்தில் ஒர் புதியநாடு. அதுவும் தமிழருக்கான தமிழீழம் என்ற உங்கள் திடசங்கற்பமான முடிவை நாங்கள் பாராட்டுகின்றோம். கோழைத்தனமும் கபடநாடகங்களும் நிறைந்த அரசியல் களத்தில் ஈழத்தமிழரைப் பகடைக்காய்களாக நகர்த்தி அரசியல் லாபம் தேடும் சுயநல மனிதர்கள் வாழும் இக் காலகட்டத்தில் துணிந்து நின்று கருமமாற்றறும் உங்கள் பணி தொடரட்டும.
தனிஒரு நபராகநின்று தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பேன் என்ற கூற்றை முதன்முதலில் உலகத்தி்ல் அங்கீகரித்து அறிமுகப்படுத்தி வைத்துள்ளீர்கள். நீங்கள் செயல்வீரர் மட்டுமல்ல நல்ல சிந்தனையாளரும், சொன்னதை நடத்திக்காட்டும் சாதனை படைத்தவர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.
எதிர்வரும் தேர்தல் களத்தில் நீங்கள் வெற்றிவாகை சூடி எங்கள் எதிர்கால வாழ்வை நாங்கள் ஈழத்தில் சென்றுவாழ வழியமைத்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையின் சின்னமாகவும், ஈழத்தமிழரின் விடிவெள்ளியாகவும் தங்கள் நாங்கள வரவேற்கிறோம். உங்கள் பணி தொடரட்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை.
தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று
வாழ்த்துக்களுடன் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications