வைகாசி விசாகம்-திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்து
திருச்செந்தூர்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூன் 5ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இத் திருவிழாவுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கோயில் வாளகத்தில் நடந்தது. ஆர்டிஓ போஸ் தலைமை வகித்தார்.
இணை ஆணையர் பாஸ்கரன், டிஎஸ்பி சந்திரபால், அறங்காவலர் வக்கீல் சந்திரசேகரன், தங்கதுரை, தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பஸ்கள் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படும். 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோயில் வாளகம், நகர பகுதிகளில் 15 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைப்பது, நகரில் அவ்வப்போது சேரும் குப்பைகளை அகற்ற 75 சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்துவது, தீயணைப்பு துறை சார்பில் 3 இடங்களில் தீயணைப்பு வண்டிகளை நிறுத்தி 64 பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு வளையம் அமைப்பது, வைகாசி விசாக நாட்களில் 2 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, சுகாதார துறை சார்பில் 24 மணி நேரம் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைப்பது, ஆறுமுகநேரி அடைக்கலபுரம் ரோட்டில் தனிக்குழு அமைப்பது, பாதுகாப்பு பணிக்காக கோயில் வாளகத்தில் 540 போலீசாரை ஈடுபடுத்தபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
சன்னதி தெருவில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்ப்டடது. இதை தொடர்ந்து வைகாசி விசாக நாளில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications