ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி
குமரி: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில புலமையை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் மூலம் வரும் 9ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும், 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும், பாடம் கற்பிக்கப்படுகிறது.
மெட்ரிக் பள்ளி குழந்தைகளை போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அவர்களின் ஆங்கிலம் மொழி திறனை வளர்க்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலும், யுனிசெப் அமைப்பும், இணைந்து செயல்வழி கற்றல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில புலமை, கேட்டல் திறன், பேச்சு திறன், வாசித்தல் போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியிலும், பயிற்சி வகுபபுகள் நடத்தப்படுகின்றன.
வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகனந்தா கேந்தராவில் 80 பேருக்கும், 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நெல்லையில் 80 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஜூலையில் மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் எனஅனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications