பர்மிய தமிழ் எழுத்தாளர் ஷாஹா!
1941ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற ஷாஹா தமிழில் அழுத்தமான சமூக நாவல்களை முதலில் தந்த பெருமையை உடையவர்.
இன்பவேதனை, பாசக்கடல், அன்னை பூமி ஆகிய 3 நாவல்களை மணிவிளக்கிலும், மலர்மாலை நாவலை முஸ்லிம் முரசிலும் தந்துள்ள இவர் சுமார் 50 சிறுகதைகளை முஸ்லிம் முரசு, மணிவிளக்கு, அமுதசுரபி, சுதேசமித்திரன், இஸ்லாமியச் சோலை ஆகிய இதழ்களில் பதிப்பித்துள்ளார்.
இவரது சிறுகதைகள் சில உருது, ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஸரிகா போன்ற வட இந்திய இதழ்களின் வெளியாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் விரைவில் மல்லாரி பதிப்பகம் மூலம் வெளியீடு காணவுள்ளன.
இந் நிலையில் சமீபத்தில் சிங்கப்பூருக்கு வந்த இவர் சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயப் பிரமுகர்களை சந்தித்தார்.
பீச் ரோடு ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சியில் புதியநிலா சிறப்பாசிரியரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத் தலைவருமான ஜஹாங்கீர் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்த, மூத்த எழுத்தாளர் சாலி ஷாஹாவுக்கு பொன்னாடை அணிவித்தார். ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கப் பிரமுகர் இக்பால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.