For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாரல் விழா- குற்றாலத்தில் 31ல் நாய்க் கண்காட்சி

By Staff
Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழாவை ஓட்டி வரும் 31ம் தேதி நாய் கண்காட்சி நடக்கிறது.

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் வரும் ஜூலை மாதம் 31ம் தேதி மதியம் 3 மணிக்கு நாய் கண்காட்சி நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நாய் உரி்மையாளர் இன்று (21ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்யலாம். மேலும் கண்காட்சி நடக்கும் நாளான்று காலை 10 மணிமுதல் 1 மணி வரையிலும் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய விரும்புவோர் நெல்லை ஜங்ஷன் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை (0462-2334314), வள்ளியூர் கால்நடை மருத்துவமனை (94450 32862, 94430 40890), அம்பை கால்நடை மருத்தகம் (954634 254243, 94433 91248), சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை (954636 223143), தென்காசி கால்நடை மருத்துவமனை (944550 01192), பாளை கால்நடை மருத்துவமனை(0462 2542871) ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X