For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம்-கோவில்கள் மூடல், பூஜை நேரம் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் பூஜை கால நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை (22ம் தேதி) காலை 5.29 மணி முதல் 7.17 மணி வரை நடக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு பட்டு சாத்தி திருக்காப்பிடப்படுகிறது.

சூரிய கிரகணம் முடிந்த பின்பு 7.30 மணிக்கு புன்னியாவாசனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 7.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு மேல் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கும்.

திருப்பதி..

அதே போல சூரிய கிரகணத்தின்போது திருப்பதி உள்பட அனைத்துக் கோவில்களும் மூடப்படவுள்ளன.

திருப்பதி கோவில் இன்றிரவு 9 மணிக்கு மூடப்பட்டு நாளை காலை பரிகார பூஜைகளுக்குப் பின் பகல் 12 மணிக்குத் தான் திறக்கப்படும என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை வழக்கமாக காலை 4 மணிக்குத் திறப்பபடுவது வழக்கம். நாளை 8 மணிக்குத் தான் நடை திறக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X