சூரிய கிரகணத்தை பார்க்க ஈரோட்டில் சிறப்பு ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

Telescope
ஈரோடு: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முழுநீள சூரிய கிரகணம் நாளை ஜூலை 22 அன்று ( புதன்கிழமை) நிகழ்கிறது. வழக்கமாக சூரிய கிரணம் 3 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனால் நாளை
ஏற்படும் சூரிய கிரகணம் 6 நிமிடம் 39 நொடிகள் முழு மறைப்பை ஏற்படுத்த உள்ளது.

இத்தகைய முழு சூரிய கிரகணம் 350 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது.

இனிமேல் இப்படி ஒரு சூரிய கிரகணம் 123 ஆண்டுகளுக்கு பிறகுதான் வரும். நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணம் காலை 5.28 மணிக்கு தொடங்கி, காலை 6.30 மணிக்கு கிரகணம் விலகி, 7.28 மணிக்கு முழுவதுமாக விலகி விடும். காலை 6.27 மணிக்கு முழு மறைப்பை பார்க்கலாம்.

ஈரோட்டில் சூரிய உதயம் நாளை 6 மணிக்கு தொடங்கும். அப்போதே நாம் 60 சதவீத கிரகணத்தை காண முடியும்.

இதை பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் காலை 6 மணி முதல் சூரிய கிரகணத்தை கிரகண கண்ணாடிகள், ஊசித்துளை காமிரா ஆகியவை
மூலம் பொதுமக்களுக்கு சூரிய கிரகணம் காண்பிக்கப்பட உள்ளது.

மேலும், சூரிய கிரகணம் குறித்த கருத்தரங்கும் நடத்தப்பட உள்ளது. எனவே சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புபவர்கள் கொங்கு கல்வி நிலையத்துக்கு வந்து
காணலாம்.

இந்த தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் என்.மணி தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+