திருச்சி பெண் விஞ்ஞானி உமாவுக்கு தேசிய விருது
திருச்சி: திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி உமாவுக்கு, மகளிருக்கான சிறந்த வேளாண்மை ஆராய்ச்சியாளர் விருது கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், போதாவூரில் உள்ளது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்த மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் விஞ்ஞானி உமா.
இவருக்கு வாழை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக 2008 ம் ஆண்டு மகளிருக்கான சிறந்த வேளாண் ஆராய்ச்சியாளர் விருதை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது.
கடந்த 16 ம் தேதி, டெல்லியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா இந்த விருதை உமாவுக்கு வழங்கி கவுரப்படுத்தினார்.
விருது பெற்ற உமாவுக்கு, திருச்சியில் நேற்று, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் உமா பேசுகையில்,
வடகிழக்கு மாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சேகரித்த360 ஒப்பற்ற வாழை ரகங்களை கொண்டு, ஆசியாவிலேயே பெரிய வாழை மரபணு வங்கியை ஏற்படுத்தியுள்ளேன்.
நாட்டிலேயே முதல் முறையாக, வாழை மரபுக்கூறு வங்கி (டிஎன்ஏ சேமித்தல்), செல் குழம்பு வங்கி ஏற்படுத்தியுள்ளேன்.
மேலும், உதயம் என்ற அதிக மகசூல் தரும் வாழை மற்றும் 4 அலங்கார வாழை ரகங்களை கண்டுபிடித்துள்ளேன்.
புதிதாக கண்டுபிடித்த திசு வளர்ப்பு முறைகள் மூலம் சிறுமலைப்பழம், மனோரஞ்சிதம், லாடன் போன்ற வாழை ரகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த விருது, தமிழகத்தில் முதல்முறையாக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications