சங்குதுறையில் கரை ஓதுங்கிய அம்மன் சிலை!
நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த சங்குதுறை கடற்கரையில் இன்று காலை அம்மன் சிலை கரை ஓதுங்கியது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.
நாகர்கோவில் அடுத்த சங்குதுறை அழகிய சுற்றுலா தலமாகும். இன்று காலையில் இப் பகுதியி்ல் ஜாகிங் சென்ற சிலர் அம்மன் சிலை ஒன்று கரை ஓதுங்கியதைக் கண்டு உடனடியாக சுசீந்தரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அம்மன் சிலை கரை ஒதுங்கிய தகவல் சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுவிட்டனர்.
அந்தச் சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட மண் சிலை ஆகும். சிலையில் பட்டு கட்டப்பட்டு ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது.
கோயிலில் பழைய சிலைகளை மாற்றி புதிய சிலை வைக்கும்போது பழைய சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கடலில் விடுவது வழக்கம். அதுபோல் இந்த சிலையையும் விட்டிருப்பார்கள் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.