உ.பியில் வழிபறி கொள்ளையனுக்கு சிலை!
பகோதி: உத்தர பிரதேச மாநிலத்தில் வழிபறி கொள்ளையன் ஒருவனுக்கு சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை அந்த கொள்ளையனே தனது வீட்டு வாசலில் திறக்க முடிவு செய்துள்ளான்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரை சேர்ந்தவர் ஜெகன்நாத் பின்த். இவர் மீது வழிபறி கொள்ளையில் ஈடுபட்டது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் அவர் போகாத சிறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாரனாசி, பதோகி, அலகாபாத், மிர்சாபூர் என அனைத்து முக்கிய சிறைகளிலும் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
பின்னர் வாழ்க்கை பாதையை மாற்றி கொண்ட அவர் 1980ல் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. பி்ன்னர் 1987ல் அந்த கிராமத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று வரை அவர் தான் கிராமத்தின் தலைவர்.
தற்போது அவர் தனக்கு தானே சிலை திறந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். தனது வீட்டு வாசலில் சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் 6 அடி உயரத்துக்கு சிலை அமைத்து வருகிறார். இதற்கு உள்ளூர் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மனிதர் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில்,
வீட்டுக்கு வெளியே எனது சிலையை அமைத்து வருகிறேன். மறைவுக்கு பின்னர் மக்கள் என்னை மறந்துவிட கூடாது என்பதால் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது சிமென்ட் சிலை.
தற்போது உபியில் பலரும் தங்களது சிலையை தாங்களே திறந்து வைத்து கொள்வதால், நானும் உயிருடன் இருக்கும் போதே எனது சிலையை பார்க்க ஆசைப்படுகிறேன்.
நான் வால்மீகி போல்...
ராமாயணத்தை எழுதிய வால்மீகி கூட துவக்கத்தில் கொள்ளையராக இருந்தவர் தான். பின்னர் மனம் மாறி பெரும் முனிவராக மாறவி்ல்லையா. வால்மீகி மாறிய போது இந்த ஜெகன்நாத் பின்த்தால் மாற முடியாதா...
என் வீ்டடின் முன்பு சிலையை கட்டி வருகிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி செய்தால் நீதிமன்றத்தில் முறையிடுவேன். இதன்மூலம் கொள்ளையன் என்ற எனது அடையாளம் மறைந்துவிடும் என்றார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications