பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரமாகாந்த் பான்டாவுக்கு விருது
கோவை: கோயம்புத்தூர் கேஜி பவுன்டேஷன் அமைப்பின் டைனமிக் இந்தியன் ஆப் த மில்லினியம் விருது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரமாகாந்த் பான்டாவுக்கு வழங்கப்பட்டது.
ரமாகாந்த் பான்டா, மும்பையில் உள்ள ஆசியன் இதய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை தவிர மேலும் நான்கு பேருக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டு்ள்ளது.
அவர்கள் சிகாகோ பல்கலைக்கழத்தின் கார்டிதோரிக் சர்ஜரி பிரிவு தலைவர் டாக்டர் வி. ஜீவானந்தம், மும்பை பிரின்ஸ் அலி கான் மருத்துவமனையின் கார்டியோவஸ்குலர் அறுவை சிகிச்சை ஆலோசகர் அனில் ஜி டென்டுல்கர், டெல்லி எஸ்கார்ட் இதய ஆராய்ச்சி நிறுவனத்தின், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குனர் டாக்டர் கேஎஸ் ஐயர், ஹைதராபாத் நாராயணா இருதயாலயா மல்லா ரெட்டி மருத்துவமனை துணை தலைவர் அனில் குமார் முல்பூர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications