கடல் சீற்றம்-குமரியில் படகு சேவை ரத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக நேற்று முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் நேற்று காலை முதல் கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
படடு சவாரிக்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் காத்திருந்தனர். ஆனால், அடிக்கடி பெரிய பெரிய அலைகள் எழுந்தது. இதையடுத்து படகு சேவை மதியத்துக்கு பிறகு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மதியமும் கடலின் சீற்றம் அடங்கவில்லை. இதை தொடர்ந்து படகு சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இன்றும் கடல் சீற்றமின்றி அமைதியாக இருந்தால் மட்டுமே படகு சேவை நடக்கும். இல்லையென்றால் படகு சேவை ரத்து செய்யப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications