குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிவேட்டை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10ம் நாளான இன்று 28ம் தேதி அம்மன் பாணாசூரனை வாதம் செய்யும் பரிவேட்டை நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 19ம் தேதி அம்மன் கொலு்மண்டபத்தில எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருநாளை ஓட்டி தினமும் அபிஷேகம், வழிபாடு, அன்னதானம், மாலையில் அலங்கார தீபாரதனை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன. 10 நாளான இன்று பாணா சூரனை வாதம் செய்யும் பரிவேட்டை இன்று நடக்கிறது.
இதையொட்டி காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 5.45க்கு மேல் 6.45க்குள் தேவியை அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீற்றிருக்க வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து 10.30 அன்னதானமும், 11.30க்கு மேல் 12.02 மணிக்குள் தேவி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணியளவில் மகாதானாபுரம் பரிவேட்டை மண்டபத்தை வந்தடைகிறார். பின்னர் வேட்டை மண்டபத்தை மூன்று முறை குதிரை வாகனத்தில் வலம் வரும் அம்பாள் இளநீரில் பாணாசூரன் இருப்பதாக அம்பு எய்து வதம் செய்கிறாள். தொடர்ந்து மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய இடங்களி்ல் பக்தர்கள் அம்பாளுக்கு சுருள் வைத்து வழிபடுகின்றனர்.
அம்பாள் குதிரை வாகனத்தில் இருந்து பல்லாக்கு வாகனத்திற்கு மாறி அங்கிருந்து திருக்கோயிலை வந்தடைகிறார். இரவு 1 மணி அளவில் கோயில் கிழக்கு வாசல் எதிரே உள்ள ஆறாட்டு மண்டபத்தில் அம்மனுக்கு ஆராட்டுடன் கோயிலுக்குள் செல்கிறார். தொடர்ந்து வாண வேடிக்கை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர் இணை ஆணையர் தனபால் உள்ளிடோர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications