Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்பராதேவுக்கு இந்திரா அமைதி விருது - பிரதீபா வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

ElBaradei
டெல்லி: சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் முகம்மது எல்பராதேவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது இன்று வழங்கப்பட்டது.

அமைதி, அணு ஆயுத ஒழிப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக பாடுபடுபவர்களுக்கு இந்த விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எல்பராதேவுக்கு விருதினை வழங்கிக் கெளரவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான நடுவர் குழு இந்திரா விருதை எல்பராதேவுக்கு வழங்குவது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்மானித்தது.

அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பராதேவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதற்கு எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+