உலக நாயகன் விருது - 10 லட்சம் குழந்தைகளிடம் வாக்கெடுப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குழந்தைகள் உரி்மைகளுக்கு பாடுபடுபவர்களுக்கு உலக நாயகன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் 10 லட்சம் தமிழ் பேசும் குழந்தைகளிடம் வாக்கெடுப்பு நடக்கிறது.

டபிள்யூ சி.பி.ஆர்.சி என்ற சுவிடன் நாட்டு நிறுவனம் சர்வதேச ஐக்கிய நாட்டு குழந்தை உரிமைகள் கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் குழந்தை உரிமைக்காக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்க தொகை வழங்குகிறது.

10 ஆண்டாக இந்தாண்டு சர்வதேச அளவில் குழந்தை உரிமைகளுக்கு போராடுபவர்களுக்கு உலக நாயகன், நாயகி விருது வழங்கப்படுகிறது.

தமிழ் பேசும் நாடுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மூலம் 11 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் மத்தியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் பிரச்சாரம் நடக்கிறது. உலக நாயகன், நாயகி விருதுக்கு 13 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைதி அறக்கட்டளை தமிழகம், புதுச்சேரி, சிங்கப்பூரில் வாக்கெடுப்பில் 10 லட்சம் குழந்தைகளை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 11 மொழிகளில் கையோடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு இம்மாதம் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+