ஐப்பசி திருகல்யாண திருவிழா - நெல்லையப்பர் கோவிலில் இன்று கொடியேற்றம்
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இன்று காலை 5.45 முதல் 6.15 மணிக்கு நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை மற்றும் இரவு அம்பாள் ரத வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி இரவு 1 மணிக்கு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்மாள் எழுந்தருளி கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக பேட்டை காமாட்சி அம்மன் கோயிலை அதிகாலையில் சென்றைடைகிறார்.
12ம் தேதி காலை 12.10 மணி முதல் 12.40 மணிக்கு கம்பை நதி காமாட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இதை தொடர்ந்து சுவாமி அம்பாள் டவுன் நான்கு ரத வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 13ம் தேதி சுவாமி அம்பாள் திருகல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 5.15 மணிக்கு மேல் 5.45 க்குள் நடக்கிறது.
பின்னர் நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் பட்டண பிரவேசம் நடக்கிறது. 14ம் தேதி அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது.