செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவில் தினசரி ரயிலாகும்
சென்னை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து திருச்சி மார்க்கமாகவே இயக்கப்படும் என ரயில்வே புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரயில் படிப்படியாக தினசரி சேவைக்கு மாற்றப்படும் என தெரிகிறது.
வாரந்தோறும் திருச்செந்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வருகிறது.
மயிலாடுதுறை- விழுப்புரம் அகலபாதைப் பணிகள் நிறைவடைந்ததும் இந்த ரயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2009 ஜூன் வரையிலான ரெயில்வே கால அட்டவணையிலும் இந்த ரயில் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 2009ல் வெளியிடப்பட்ட புதிய கால அட்டவணையில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் படிப்படியாக தினசரி ரெயிலாக மாற்றப்படும் என்றும் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications