வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 42வது மாத தமிழ்த்தேர் வெளியீடு
விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி மன்றத் தலைவர் கா.அசோகன் மற்றும் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
வரவேற்பு நல்கினார் அமைப்பின் ஆலோசகர் மற்றும் தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அமைப்பின் துணைத்தலைவர் கந்தநாதன்.
வினாவும் விடையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தினை பொறுப்பேற்று நடத்தினார்கள் நர்கீஸ் பானுவும் செல்வி நிவேனிதா ஆனந்தனும்.
கவிஞர்கள் வரிசையில் கீழைராஸா, சந்திரசேகர், தங்க ராசாக்கண்ணு, ஜியாவுதீன், இளையசாகுல், இஸ்மத், ரெஜிகை நிலவன், ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி, ஜீனத் கமால், டி.எம்.பழனி, சரவணன், ஜெயா பழனி, காவிரிமைந்தன், கந்தநாதன், நர்கீஸ் பானு, நிவேனிதா ஆனந்தன் இவர்களுடன் கலையன்பன் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்க, இனிதே கவியரங்கம் நிறைவுபெற்றது.
சந்தானகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றியதோடு வானலை வளர்தமிழ் அமைப்பிற்கு ரூ.10,001யை நன்கொடையாகவும் வழங்கினார்.
அமைப்பின் தலைவர் எல். கோவிந்தராஜ் மற்றும் லட்சுமி நாராயணன் நிகழ்ச்சியை மிக நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அடுத்த மாதத் தலைப்பு இசையும் பாடலும் என்கிற அறிவிப்புடன் ஜெயா பழனி நன்றியுரையாற்ற விழா நிறைவு பெற்றது.













Click it and Unblock the Notifications