For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிஞர் மு.மேத்தாவுக்கு உமறுப் புலவர் விருது

By Staff
Google Oneindia Tamil News

Mu. Metha
சென்னை: கவிஞர் மு.மேத்தாவுக்கு இந்த ஆண்டுக்கான உமறுப் புலவர் விருது வழங்கப்படுவதாக இஸ்லாமிய இலக்கியக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எம்.இதாயதுல்லா செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை 7 அனைத்துலக இலக்கிய மாநாடுகளையும், ஒரு மாநில மாநாட்டையும் நடத்தியுள்ளது. இரண்டாவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை, சோழிங்கநல்லூர் சதக் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய இந்த ஆண்டுக்கான உமறுப்புலவர் விருது கவிஞர் மேத்தாவுக்கு வழங்கப்படும்.

நலிந்த எழுத்தாளருக்கான ரூ.20 ஆயிரம் கொண்ட விருது துபாஸ் தாஜூதீனுக்கு வழங்கப்பட உள்ளது.

மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X