நாளை திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை 2.668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றபடுகிறது.
11 நாட்கள் எரியும் இந்த தீபத்துக்கு 3500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
மகா தீபத்தையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றபடும்.
மாலை 6 மணிக்கு கோவிலில் அகண்டதீபம் ஏற்றபட்ட பின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றபடும். இதையடுத்து வாண வேடிக்கைகள் நடைபெறும்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 டி.ஐ.ஜிக்கள் தலைமையில் 8 எஸ்பிக்கள், 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் வெடிகுண்டு சோதனைகளும் நடந்து வருகின்றன.
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.