குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முப்பெரும் விழா
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் இஸ்லாமிய புத்தாண்டு, சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன.
சங்கத்தின் மூத்த துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையேற்க, சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் வரவேற்புரையாற்றினார்.
கடந்த 17ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சி குவைத், ஃபஹாஹீல், கத்ஆ 7 பகுதியில் அமைந்துள்ள 'மஜீத் அல்-ஹிலால் அல்-உதைபீ மஸ்ஜித் பள்ளிவாசலில் துவங்கியது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில் மற்றும் சூக்குல் வதனிய்யா எதிரில் அமைந்துள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளுக்கு குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு தமிழ் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என பலர் தங்கள் குடும்பங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.