ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
நாளை வைகுண்ட ஏகாதசியாகும். இதையொட்டி வைணவக் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை 3 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்து பெருமாளை வழிபட்டு நாளை அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாக சென்றால் மோட்சத்தை அடையும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையடுத்து ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பெருமளவில் குவிந்து வருவதால் நாளை இரவு வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
--