அருவிகளில் நீர் இல்லை-வெறிச்சோடிய குற்றாலம்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: சீசன் மந்தமாகி விட்டதால் குற்றாலம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அருவிகளில் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் டல்லாகி விட்டது. மலைப் பகுதியில் மழை குறைந்து விட்டதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து போய் விட்டது.
மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் வருகிற சுற்றுலாப் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து குளிக்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால் சீசன் டல்லாகி விட்டதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
குற்றாலத்தில் உள்ள பூங்காவில் யாரையும் பார்க்க முடியவில்லை. குரங்குகள்தான் படு சுதந்திரமாக நடமாடி வருகின்றன.
கடைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் நடைபாதை வியாபாரிகள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
பயணிகள் வரத்து அடியோடு குறைந்து போய் விட்டதால் குற்றாலத்தில் உள்ள சுற்றுலாத்துறை தகவல் அலுவலகமும் மூடிக் கிடக்கிறது.













Click it and Unblock the Notifications