For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்காக துபாயில் சர்வமத பிரார்த்தனைக் கூட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Sudarvamsan holds prayer for Eelam Tamils and Gaza Muslims
துபாய்: சுடர்வம்சம் அமைப்பின் சார்பில் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கைத் தமிழர்கள், காஸாவில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கைக்காவும், நல வாழ்வையும் வேண்டி அனைத்து பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் - தலைவர் பூ. ரகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் பாதிக்கப்படுகின்ற அப்பாவி தமிழ் மக்கள், காசாவில் பாதிக்கப்படுகின்ற அப்பாவி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி,அமைதியும், நல்வாழ்வும் பெறவேண்டி அனைத்து மதபிராத்தனைக்கூட்டம் 28ம் தேதி மாலை 7.30மணிக்கு துவங்கி 9.30வரை சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்புப் பிராத்தனைக்கூட்டத்தை "சுடர்வம்சம்" நிறுவனர்-தலைவர் பூ. ரகுராஜா தலைமையேற்று நடத்தினர்.

இலங்கை, காசா மற்றும் உலக மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி, அமைதியும், நல்வாழ்வு வாழ தொடர்ந்து பிராத்தனை செய்யவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டர்.

சங்கமம் தொலைகாட்சி இயக்குனர் கலையன்பன், தொழிலதிபர் அபுதாஹிர், சேரே.பட்டிணம் மணி, ஆறுமுகம், கவிமதி, முத்தமிழ்வளவன், முத்துகிருஷ்ணன், பாரத், முத்தழகு, சிம்மபாரதி, பல சங்கங்களின் நிர்வாகிகள், மற்றும் பலர் கலந்து கொண்டு அப்பாவி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி, அமைதியும், நல்வாழ்வும் பெறவேண்டி பிராத்தனையில் கலந்துக்கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X