For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கையெழுத்து இயக்கம்

Google Oneindia Tamil News

Cow
நெல்லை: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரியும், பசுவதை தடை சட்டத்தை அமுல்படுத்த கோரியும் இந்து அமைப்புகளின் சார்பில் விஸ்வமங்கள கோமாதா கிராம யாத்திரை நெல்லையை வந்தடைந்தது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 50 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் அளிக்கப்படும் என விஸ்வமங்கள கோமாதா கிராம யாத்திரை மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன் நெல்லையில் நிருபர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பாரதத்தின் வளர்ச்க்கு தேசிய விலங்கான பசுவும், அதை சார்ந்த விவசாயமும், முக்கிய காரணிகளில் ஒன்று.

தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இயற்கையுடன் இணைந்த தன்மையை நாட்டு பசுக்களில் பார்க்க முடியும். ஆனால், இந்தியாவில் ஆண்டிற்கு ஒன்றேகால் கோடி பசுக்கள் கொல்லப்படுகின்றன.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். பசுவை ஆதாரமாக கொண்ட இயற்கை விவசாயத்தை கொள்ளையாக அறிவிக்க வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் இருந்து 108 நாட்கள் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு விஸ்வமங்கள கோமாதா கிராம யாத்திரை நடந்து வருகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X