For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் பலத்த பாதுகாப்பு - இருமுடி கட்டுகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறககப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருமுடிக் கட்டுக்கள் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை.

இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜி.விஷ்ணு நம்பூதரி கோவில் திறுநடையை திறந்து தீபம் ஏற்றி பூஜையை தொடங்கினார். காலை 4.30 மணி முதல் 7 மணிவரை நெய் அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து 8 மணி முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு உச்சகால பூஜை நடந்தது. பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

மாலை 5 மணி்ககு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு அலங்கார தீபாரதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9.30 மணி்க்கு அத்தாள அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இன்று சபரிமலையில் பலத்த மழை கொட்டியது. முதல் நாளான இன்றே பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்தனர். சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பம்பையில் இருந்து மழையில் நனைத்தபடியே மலையேறி சென்றார்கள்.

இந்தாண்டு சபரிமலையில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான பக்தர்களின் இருமுடிகட்டுகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

சன்னிதானத்தின் வடக்கு வாசல், நடைபந்தல், பாண்டித்தாவளம், பம்பை ஆகிய இடங்களில் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X