இந்த ஆண்டின் நியூஸ்மேக்கராக ராகுல் காந்தி தேர்வு

யாஹூ இணையதளத்தின் சர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட நபராக இந்த ஆண்டில் ராகுல் காந்திதான் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து யாஹூ இந்தியா நியூஸ் தளத்தின் செய்திக்குறிப்பில், ராகுல் குறித்த சில முக்கிய செய்திகள், இந்த ஆண்டின் மிகப் பெரிய செய்தியாக அமைந்தது. உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்த ராகுலின் செயல் குறித்த செய்தி, அனைவராலும் வியப்புடன் படிக்கப்பட்டுள்ளது, பார்க்கப்பட்டுள்ளது.
அதேபோல இளைஞர் பட்டாளத்தை காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்காக அவர் ஓய்வின்றி உழைத்து வருவதாலும் ராகுலின் செல்வாக்கு செய்திகள் மத்தியில் உயர்ந்துள்ளது.
மேலும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் தனக்கு தேடி வந்த பதவியை அவர் நிராகரித்து கட்சிப் பணிக்காக கடுமையாக பாடுபட்டு வருவதும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் காத்ரீனா கைப் உள்ளார்.
ராக்கி சாவந்த்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், லலித் மோடி ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட செய்திக்கு எவ்வளவு க்ளிக்குகள் கிடைத்தது என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டின் நியூஸ்மேக்கர் பட்டியல் உருவாக்கப்பட்டதாக யாஹூ நியூஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
நிகழ்வுகள் வரிசையில், ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பாக டெல்லி உயர்நீதி்மன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு, மும்பை கடல் பாலம், பன்றிக் காய்ச்சல் தாக்குதல் ஆகியவை அதிகம் படிக்கப்பட்ட செய்திகளாக உள்ளன.
முக்கியஸ்தர்களின் மரணங்கள் பிரிவில் ராஜசேகர ரெட்டியின் மரணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து மகாராணி காயத்ரி தேவி, பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன், ஜேட் கூடி, நடுவர் டேவிட் ஷெப்பர்ட் ஆகியோரின் மரணச் செய்திகள் அதிகம் பார்த்து, படிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications