அடையாள அட்டையின்றி சபரி்மலையில் தங்கிய 150 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
பம்பை: சபரிமலையில் அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருந்த 150 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபரிமலையில் மண்டலகால பூஜையையொட்டி ஏராளமான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியம் அனைத்து ஊழியர்களுக்கும் தேவசம் போர்டு சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவசம்போர்டு ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வந்திருப்பவர்களுக்கும், அம்மாநில போலீஸ் சான்றிதழ் பெற்று அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் யாரும் சபரிமலையில் தங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருந்த 150 பேர் பிடிபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பணியாற்றி வருபவர்கள். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications