தீபாவளியன்று முயல், காடை கறிக்கு விற்க வனத்துறை தடை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓட்டல்களில் காட்டு முயல், காடைகளின் கறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்காக பல்வேறு ஓட்டல்களில் வான் கோழி, நாட்டுக் கோழி, ஆட்டுக்கறி, காடை, கவுதாரி போன்ற கறி பிரியாணி விற்பனை செய்வார்கள்.
இந்த நிலையில், இது குறி்த்து திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி தங்கராஜ் கூறுகையில்,
வனப்பகுதி மற்றும் பட்டா நிலத்தில் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். அதே போன்று ஓட்டல்களில் காட்டுமுயல், காடை போன்றவைகளின் கறியை சமைப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இது குறித்து அனைத்து ஓட்டல்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறும் ஓட்டல்கள் மீது சடடப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications