துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் ஈமான் அமைப்பின் ஆடிட்டர் எஸ்.எம்.ஃபாரூக், வளைகுடா தமிழர் பேரவையின் நிறுவனர் எஃப்.எம். அன்வர் பாஷா, பொறியாளர் அப்துல் மாலிக், தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மணி, அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் ஹமீது யாசின், மக்கள் தொடர்பு செயலாளர் ரியாஸ் அஹமத், முதுகுளத்தூர்.காம் இணைய இதழின் நிர்வாகி முதுவை ஹிதாயத், அமீரக தமிழர் அமைப்பின் அமுதரசன் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், வானலை வளர்தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் ஜியா, சிம்மபாரதி, சந்திரசேகர், லெக்ஷ்மி நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அபுதாபியில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழச்சி
இதற்கிடையே அபுதாபியில், புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி 05-08-10 ஞாயிறு மாலை நடைபெற உள்ளதாக அபுதாபி லைலத்துல் கத்ர் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பெங்களூர் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாபிஜ் சைபுதீன் ரஷாதி முப்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அல் சுக்கூர் மாடல் ஸ்கூல் வளாகத்தில் (சூடான் கல்சுரல் சென்டர் பள்ளிவாசல் பின்புறம்) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாக கத்ர் கமிட்டி தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications