மேற்கு தொடர்ச்சி மலையின் அரிய வகை உயிரினங்கள் பற்றிய நூல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்நூல் நாளை வெளியிடப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த அசோகா சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்கள் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி கணேசன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,

'நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாவர வகைகள், விலங்கு இனங்கள் குறித்து, இந்த அமைப்பு ஆய்வு செய்வதோடு, சுற்றுபுற சூழல் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில அமைந்துள்ளது.

தொடர்ச்சியான பசுமை மாறாக் காடுகள், புலிகள் சரணாலயம் மற்றும் அரிதான விலங்கினங்கள், தாவர வகைகளை இங்கு காணலாம்.

புலித்தடங்களில் இயற்கை புதையல் என்ற தலைப்பில் தற்போது புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் புலிகள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்கள் பற்றியும், மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்கள் மற்றும் வெவ்வெறு வனப்பகுதிகளுக்குள் செல்வதற்கான பாதைகள் குறித்தும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், தவளைகள், பாம்புகள், தாவர வகைகள் உள்பட பல்வேறு இனங்கள் போட்டோக்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+