தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து-மத்திய அரசு உறுதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதைப் போல தெலுங்குக்கும் செம்மொழி அந்தஸ்து கோரப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர அரசும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீடடின்பேரில் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு மைசூரில் உள்ள இந்திய மொழியியல் ஆய்வு மையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசிக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications