For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்: விழிப்புணர்வுக்கு இளவட்ட விழா

Google Oneindia Tamil News

Aids
நெல்லை: தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இளவட்டம் திருவிழா நடத்த எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக நெல்லை கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது,

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்டப்படி 2012க்குள் எய்ட்ஸை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 257 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது. அம்பை, நாங்குநேரி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் 190 பேருக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 பேர் நகர் புறத்தையும், 100 பேர் கிராம புறத்தையும் சேர்ந்தவர்கள்.

கிராமப்புற பகுதிகளில்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. கூலி தொழிலாளர்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 24 வயதுகுட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. எனவே இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடத்துகிறது.

நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன்கான் போட்டிகளை துவக்கி வைக்கிறார்.

இதில் 32 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பின்னர் சென்னையி்ல் இளவட்டம் என்ற பெயரில் வரும் 10, 11,12 ஆகிய தேதிகளில் இளைஞர் திருவிழா நடக்கிறது. இதில் 1.50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X