செம்மொழி மாநாட்டுக்கு 10 சமையல் காண்டிராக்டர்கள் தேர்வு – அமைச்சர் வேலு
Subscribe to Oneindia Tamil
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக 10 சமையல் காண்டிராக்டர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
இதுகுறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழக பொதுத்துறை மூலம் 10 சமையல் கான்ட்ராக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். உணவு வழங்குவதற்காக கோடீசியா அரங்கில் இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாநாட்டு துவக்க விழாவில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள்.
இறுதி நாளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான மக்களும், 6000 சிறப்பு அழைப்பாளர்களும், வெளிநாட்டினரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications