துபாயில் ‘தி சிட்டிசன்ஸ்’ என்ற புதிய அமைப்பு துவக்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் 'தி சிட்டிசன்ஸ்" என்ற புதிய அமைப்பு 30.09.2010 வியாழக்கிழமை மாலை ரேடிசன்ஸ் புளு ஹோட்டலில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு அமீரகத்தில் வாழ்ந்து வரும் பல்வேறு தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படும்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அமீரக தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் ஒருவருக்கொருவருவர் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் என்றார் இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என். வில்லியம்ஸ்.
டாக்டர் என். கானே இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"சட்டமும் நாமும்" எனும் தலைப்பில் கருத்தரங்கு துவக்க நிகழ்வாக நடைபெற்றது. அமீரகத்தின் பிரபல வழக்கறிஞர்கள் டாக்டர் என். கானே, தாமர் அல் அஜீஸி, டாக்டர் ஜே.சதீஷ் குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: முதுவை ஹிதாயத்













Click it and Unblock the Notifications