டொரண்டோவில் நவ. 13ல் கவிஞர் சேரனின் ‘நாட் பை அவர் டியர்ஸ்’ நாடகம் மீண்டும் அரங்கேற்றம்

வரும் 13- ம் தேதி மாலை 4. 30 மணிக்கும், இரவு 8 மணிக்கும் இரு காட்சிகளாக கொலிஜ் அன் சென் ஜார்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தின் காப்லர் சென்டர் அரங்கில் கவிஞர் சேரனின் 'நாட் பை அவர் டியர்ஸ்" என்ற ஈழ வலிகளை வெளிப்படுத்தும் நாடகம் மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.
அசைலம் தியேட்டர் குரூப்-ஆல் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் துஷி ஞானப்பிரகாசத்தின் நெறியாள்கையிலும், கருணாவின் வடிவமைப்பிலும் கடந்த நவம்பர் மாதம் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது.
இதனையடுத்து ஒட்டாவா நகரிலும், அமெரிக்காவின் நியு ஜெர்சி, கனக்டிகட் ஆகிய மாநிலங்களிலும், நியு யார்க், சிகாகோ ஆகிய நகரங்களிலும் நடைபெற்றது. இப்பொழுது மீண்டும் டொரண்டோவில் அரங்கேற்றப்படவிருக்கிறது.
ஈழத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் இந்த நாடகம் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகிய ஈழத்து கவிஞர்களின் கவிதைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்ட நாடகமாகும்.












Click it and Unblock the Notifications