ஈரோடு அருகே சாலை வசதி வேண்டி 3000 வீடுகளில் கறுப்புக் கொடி
ஈரோடு: ஈரோடு அருகே சாலை வசதி வேண்டி 3000 வீடுகளில் கறுப்புக் கொடி ஏந்தி பொது மக்கள் நூதன போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அருகே உள்ள வாய்க்கால் மேடு, இந்தியன் நகர், பெரிய செட்டி பாளையம், கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
வாய்க்கால் பகுதி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ சாலை வசதி இல்லை. இந்தப் பகுதியில் உள்ள செம்மண் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதால் இப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர் என பலரும் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை.
இதனால், அவர்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்பு கொடியேற்றியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications