மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

Meenakshi Amman Temple
திருச்செந்தூர்: திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் யானைகளை குளிப்பாட்ட நவீன ஷவர்பாத் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

திருச்செந்தூர் கோயிலில் முதல்வர் அறிவித்தப்படி ரூ.9.7 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன. திருக்கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை கபலீஸ்வரர், வடபழனி முருகன், திருவல்லிகோணி பார்த்தசாரதி ஆகிய கோயில்கள் தரச் சான்றிதழ்கள் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகியவை ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டு விற்பனை முறைகேடுகளை பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும். கோயில் பணியாளர்களுக்கு 6வது சம்பள கமிஷன் பரிந்துரை விரைவில் நிறைவேற்றப்படும்.

தினக்கூலி பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும். கோயில் நிலங்களை முழுமையாக நீங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பணியாளர்கள் நியமிக்கும்போது ஏற்கனவே பணியில் உள்ள தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+