சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் விருந்து
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் ஓணம் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஓணம் பண்டிகையை ஓட்டி ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையும், மலையாள மாதமான சிங்ஞம் (ஆவணி) பிறப்பும் அடுத்தடுத்து வருகிறது.
இதையொட்டி சபரிமலை கோயில் நடை 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை புதிய தந்தரியாக கண்டாறு ராஜீவரு பொறுப்பேற்கிறார். 25ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
22, 23ம் தேதிகளில் சன்னிதானத்தில் ஓணம் விருந்து நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications