For Daily Alerts
Just In
இம்மார்ட்டல் சோல்-அதிதி அஜீத்தின் ஓவியக் கண்காட்சி
அதிதி அஜீத்தின் மூ்ன்றாவது மற்றும் முதலாவது தனி கலைக் கண்காட்சி சென்னையில் தொடங்கியுள்ளது.வின்யாசா பிரீமியர் ஆர்ட் கேலரியில் தொடங்கிய இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல கார்ட்டூன் கலைஞர் மதன் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பத்திரிக்கையாளரும், விஜய் டிவியின் குற்றம் நடந்தது என்ன புகழ் பா.ராஜநாராயணன், முருகன் இட்லி கடை நிர்வாக இயக்குநர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மார்ட்டல் சோல் என்ற பெயரிலான இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். விடுமுறை தினங்களிலும் கூட கண்காட்சி செயல்படும்.
கண்காட்சி நடைபெறும் இடம்
வின்யாசா பிரீமியர் ஆர்ட் கேலரி, 21/11, முதலாவது மெயின் ரோடு, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை -4, தொலைபேசி: 044 32533655.
Comments
Story first published: Tuesday, August 17, 2010, 10:59 [IST]