ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பயணம்
நெல்லை: தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி குமரியில் இருந்து டெல்லிக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்களுக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரத் ஜோடோ அமைப்பு சார்பில் நாட்டு மக்களிடம் தேசிய ஒருமைப்பாடு, நாட்டு பற்று ஏற்படுத்துவது, பொது சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவது போன்ற பல்வேறு நோக்கங்களை மையமாக கொண்டு குமரியில் இருந்து டெல்லிக்கு 5 பேர் பயணம் செய்கின்றனர்.
ஹீராலால் யாதவ் சைக்கிளில் புறப்பட, அவருடன் பத்ரலாம், ராஜேந்தர், நவீன்குமார், சந்தீப் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இதில் ஹீராலால் யாதவ் சைக்கிளில் இருக்கை பகுதி இல்லாமல் நின்று கொண்டே சைக்கிள் ஓட்டி சென்றார்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள் பயணம் செய்தவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தன்னர்வ அமைப்பினர் வரவேற்றனர்.
இதுபற்றி யாத்திரை குழுவினர் கூறுகையில், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் வழியாக அக்டோபர் மாதம் 7ம் தேதி டெல்லியை அடைவோம் என்றனர்.












Click it and Unblock the Notifications