ஜப்பான் ஹோட்டலுக்குக் கீழே வெடிக்காத நிலையில் 900 குண்டுகள் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

World War II bombs
டோக்கியோ: ஜப்பானின் ஓகினாவா நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கீழ் வெடிக்காத நிலையில் இருந்த 900 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கு மீட்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் 2ம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டவையாகும்.

2ம் உலகப் போரில் ஜப்பான் ஒரு முக்கிய நாடு என்பதால் அங்கு தரையைத் தோண்டும் பணியில் ஈடுபட்டால், கீழே வெடிகுண்டுகள் புதைந்துள்ளதா என்பதை அறிய மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடுவது வழக்கம். அந்த அடிப்படையில், ஓகினாவா நகரில் சாலைப் பணியில் ஈடுபட்டபோது மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்குள்ள ஹோட்டலுக்குக் கீழே உள்ள பகுதியிலிருந்து பீப் ஒலி கேட்கத் தொடங்கியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.

இதையடுத்து ராணுவ வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர் குழுவினர் வந்து சோதனை நடத்தினர். அப்போதுதான் ஹோட்டலுக்குக் கீழே வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் புதைந்திருப்பது தெரிய வந்தது. மொத்தம் 902 வெடிகுண்டுகள் புதைந்துள்ளன.

இவை அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வளவு வெடிகுண்டுகள், அதுவும் வெடிக்காத நிலையில் ஜப்பானில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

ஓகினாவா முழுவதும் 2ம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பெருமளவில் புதைந்து கிடைக்கிறதாம். எனவேதான் அங்கு கட்டுமானப் பணியின்போது முதலில் மெட்டல் டிடெக்டரால்சோதனையிட்ட பின்னரே மண்ணைத் தோண்டுகிறார்கள். அவ்வப்போது அங்கு வெடிகுண்டுகள் கிடைப்பது சகஜம். ஆனால் பெருமளவில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

தலைநகர் டோக்கியோவிலும் கூட இதுபோல வெடிகுண்டுகள் கிடைப்பது சகஜம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+