சங்கரன்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக வழிபாடு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் 108 சங்குகளில் புனித நீர் வைத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை கொண்டாடும் வகையில் கோமதி அம்பிகை மாதர் சங்கம் மற்றும் திருமந்திர வழிபாட்டு மன்றம் இணைந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தின.
சங்கரலிங்கசாமி சன்னதி முன்பாக ஓம் என்று எழுதப்பட்டு சுவாமிக்கு 54 சங்குகளும், அம்பாளுக்கு 54 சங்குகளும் என்ற விகிதத்தில் புனித நீர் வைத்து யாகம் நடத்தி பகல் உச்சி காலத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோமதி அம்பிகை மாதர் சங்கத்தின் பட்டமுத்து, திருமந்திர வழிபாட்டு மன்றத்தின் ஜெகநாதராஜா மற்றும் சிவதொண்டர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications