24-ம் தேதி தொடங்குகிறது குற்றாலம் சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா வரும் 24-ம் தேதி ஆரம்பமாகிறது. இந்த விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் திருவிழா வரும் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
வரும் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சாரல் திருவிழா ஆரம்பமாகிறது. கலெக்டர் ஜெயராமன் வரவேற்புரை அளிக்கிறார்.
சுற்றுலா மற்றும் பதிவு துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் சாரல் திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். அமைச்சர் பெரிய கருப்பன் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
எம்.பி. லிங்கம், எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எம்.பி.க்கள் தங்கவேலு, ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அன்று மாலை 4 மணிக்கு அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், 5 மணிக்கு சென்னை வடிவுடையம்மன் நாட்டியாலயா சுஜாதா குழுவினரின் பல்சுவை நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு ராஜ்குமாரி்ன் அசத்தப் போவது யாரு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.












Click it and Unblock the Notifications