மேகாலயாவில் 5 மாதத்தில் 151 பேருக்கு எய்ட்ஸ் தாக்கம்: 30 கர்ப்பினிகளும் அடக்கம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,616 பேர் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா என்று தெரிந்து கொள்ள பரிசோதனை மையங்களுக்குச் சென்றுள்ளனர். இதில் 121 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று மேகாலயா எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
கருவுற்றிருக்கும் 5,636 பெண்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பரிசோதனை செய்து கொண்ட 931 பேர்களில் 41 பேருக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மேகாலயாவில் 344 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இதில் 170 ஆண்களும், 162 பெண்களும், 12 குழந்தைகளும் அடக்கம்.












Click it and Unblock the Notifications